இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத்தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தா லும், எல்லை நிர்ணய அறிக்கை நாடா ளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும், அதற்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசெம்பர் மாத இறுதியில் பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடையும். அதன்பின்னர் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலவேளை மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பினர் தமிழ்- சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை இலங்கை விரைவில் நடத்தவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இது தொடர்பான வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.