பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை வரலாற்றில்  பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக  நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில்  மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால்   சுனாமி பேரலை  ஏற்பட்டது . இதன் காரணமாக இந்தியா,இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சுமார் 230,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர், இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டன.  இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.