மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது:

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி நீதித்துறை செயற்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.