வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை : அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ்

‘வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை’ என்று மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில்  (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

காலிமுகத்திடல் அரகலைய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. ‘எனினும் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை’ என்று மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை’.’அனைத்து மக்களையும் விட அதிகமாக வடகிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொள்ள வேண்டும்’.’எனவே அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது’ என்று மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
‘அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காகவும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் ‘ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.