தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
விவாதங்களின் பின்னர் குறித்த தேசியபட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். நேற்றைய அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.



