கட்டார் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை…

கட்டாரில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும். சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது.