தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் இராஜதந்திர முனைப்புக்களுக்கு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தயாராகி வருகிறது.
தமிழகத்தில் இருந்து அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் முன்னதாக அறிவித்திருந்தது.
தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.