மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐந்து பேருக்கு எதிரான தடையுத்தரவை, மேலும் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை மேலும் நீடித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்கள் 05 பேருக்குமான தடையுத்தரவு எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
07 காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக மண் அகழ்வதற்கான காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மன்னார் தீவை அண்மித்த பகுதியில், புதிய காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான மண் பரிசோதனைக்கு சென்றவர்களுக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பின்னர், இந்த விடயம் தொடர்பில் பேசாலை பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.