அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றது.
குறித்த கையெழுத்து போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதில் பலர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன் குறித்த கையெழுத்து போராட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்,
அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் விசாரனைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் குரலை கேட்டு அரசாங்கம் செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்யகோரியே இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.



