மெஹிதி மற்றூம் அடனன் ஆகிய இருவரும் 15 வயதில் ஆபத்துகள் நிறைந்த தங்களது சொந்த நாட்டிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஆவர்.
“என்னைப் பற்றிய முடிவை எனது தந்தையின் நண்பர் எடுத்தார்- பிறகு என்னை படகில் வைத்து அனுப்பினார்கள்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் தடுப்பு முகாமில் உள்ள மெஹிதி. 2013ம் ஆண்டில் மெஹிதியும் அவரது உறவினரான அடனனும் தன்னந்தனியாக இந்தோனேசியா வந்தடைந்து மேலும் பல தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் அங்கிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்திருக்கிறார்கள்.
படகில் வந்ததற்காக சுமார் 8 ஆண்டுகளாக பரிதவிக்கும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.