ஐரோப்பிய ஒன்றியம் தனது இறக்கு மதியைத் தடை செய்யும் வரை காத் திருக்காமல், ரஷ்யா ஐரோப்பிய எரிவாயு சந்தையில் இருந்து விலகி, அதன் விநியோகங்களை வேறு இடத்திற்கு திருப்பிவிடலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூட்டின் கூறியுள்ளார்.
கிரெம்ளினில் ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோவை வரவேற்ற பின்னர் புதன்கிழமை(4) ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். “இங்கே எந்த அரசியல் நோக்கமும் இல்லை. ஆனால் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் நாம் மூடப் போகிறோம் என்றால், இப்போது நிறுத்திவிட்டு நம்பகமான கூட்டாளிகளான நாடுகளுக்குச் சென்று, அங்கு நம்மை நிலைநிறுத்திக் கொள்வது நல்லது. ஆனால் அது இன்னும் ஒரு முடிவு அல்ல நான் காத்திரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன், சொல்லப்போனால். எங்கள் நிறுவனங்களுடன் இந்தப் பிரச்சினையில் பணியாற்றுமாறு நான் நிச்சயமாக அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவேன், ”என்று பூட்டின் ரஷ்ய பத்திரிகையாளர் பாவெல் ஜருபினிடம் கூறினார்.
ரஷ்ய வளங்களை முற்றிலுமாக வெளியேற்று வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கத்தை மீண்டும் மீண்டும் கூறுவதால், மாஸ்கோ விநியோகங் களை “வளர்ந்து வரும் சந்தைகளுக்கு” திருப்பிவிடலாம் என்று பூட்டின் பரிந்துரைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிசக்தி நெருக்கடி “பல ஆண்டுகளாக” அந்த குழுவின் அதிகாரிகள் பின்பற்றும் “தவறான கொள்கைகளின்” விளைவாகும் என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் உட்பட அதன் அனைத்து கூட்டாளிகளுக்கும் ரஷ்யா “எப்போதும் நம்பகமான எரிசக்தி வழங்குநராக இருந்து வருகிறது”. “நம்பகமான” கூட்டாளிகளுடன் மாஸ்கோ தொடர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“உதாரணமாக, கிழக்கு ஐரோப்பா, ஸ்லோவாக் கியா மற்றும் ஹங்கேரியில் உள்ளவர்களுடன். எண் ணெய் மற்றும் எரிவாயு இரண்டிலும் எங்கள் எரிசக்தி வளங்களை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம், மேலும் எதிர்காலத்தில் அதைத் தொடர்ந்து செய்ய நாங்கள் விரும்புகிறோம். இந்த நாடுகளின் தலைமை இன்றைய அதே கொள்கையை, அதாவது எங்களுக்கு நம்பகமானதாக இருப்பதைப் பின்பற்றும்” என்று ஜனாதி பதி விளக்கினார்.
பூட்டினுடனான சந்திப்பைத் தொடர்ந்து, புடா பெஸ்ட் மாஸ்கோவிலிருந்து எண்ணெய் மற்றும் எரி வாயு விநியோக உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாக சிஜ்ஜார்டோ தெரிவித்தார். ரஷ்யாவும் ஹங்கேரி
யும் எரிசக்தி வள விநியோக பாதைகளை பல்வகைப் படுத்துவதில் பணியாற்ற ஒப்புக்கொண்டுள் ளன என்று அவர் கூறினார்.



