மாகாணசபைத் தேர்தல்: விசேட செயற்குழு நியமனம் வரவேற்கத்தக்கது – தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்போம்.விசேட செயற்குழுவில் முன்னிலையாகி யோசனைகளை முன்வைப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.