மன்னாரில் காற்றாலைக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக இரண்டு இளைஞர்கள் நேற்று(10) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நடைபவனியாக சென்றுள்ளனர்.
நடைபவனியாக சென்ற இளைஞர்கள் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி. எமது நிலங்களும் / எமது வளங்களும் எமக்கானதே ! முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம் கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது.
உள்ளிட்டவாறான கோஷங்களை முன்வைத்து போராட்டத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் நடைபவனியாக சென்றுள்ளனர்.