யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாராதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (16) ஜனாதிபதி விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அதேவேளை, தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால், விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக, தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்றுக் காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வழங்கத் தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன், தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



