உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த வேண்டுகோளை ஏற்று சபையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் இன்று கருப்பு நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.
இந்நிலையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூரும் விதத்தில் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வெள்ளை, கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.