அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி உள் நுழையும் இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதி இழுவைமடி படகுகளினால் வடமாகாண மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் செயற்பாடு வடக்கு கடற்பரப்பில் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இந்திய இழுவைமடி படகுகளால் ஏற்படும் பிரச்சனைகள் சம்மந்தமாக இந்தியப் பிரதமருக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. யாழ். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியிடம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் இந்த மகஜரினை நேற்று புதன்கிழமை (10) மாலை 3.30 மணிக்கு இந்திய தூதரகத்தில் வைத்து கையளித்தனர்.



