வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கல் போராட்டத்தால் பாதிப்பில்லை: அரசாங்கம் கருத்து

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் நடவடிக்கை, அரசுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில்   முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். இதன்படி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தமக்கு தகவல்கள் கிடைத்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து நேற்றைய அமைச்சரவையில் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.