வரி குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை: ஜனாதிபதி

இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரியை 20 சதவீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்த வரியை, மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (07) விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதன் விளைவாக தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் தாங்கள் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்று எதிர்க்கட்சியினர் கொடூரமான கனவை காண்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்
ஆனால், இந்த கனவு நனவாகாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.