உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாகுவதாக வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“உலக நாடுகளில் மார்பக புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே, முன்கூட்டியே நோயை கண்டறிதல் முக்கியம் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். இலங்கையில் வருடாந்தம் சுமார் 5500 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பெண்ணாக இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தோல் நிறத்தில் மாற்றம், தோல் ஒரு தடித்தல், முலைக்காம்புகளில் மாற்றங்கள் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுக வேண்டும்.
இவ்வாறான சந்தரப்பங்களில் விரைந்து செயற்பட்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.