398 Views
பேரவை உறுப்பினர்கள் பதவி விலகல்
இலங்கை தேசிய விளையாட்டு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர்.
நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு பேரவை அமைக்கப்பட்டது. எனினும் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் பதவிவிலகல்களை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.