அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வணிகங்களுக்கு கடன் அறிவிப்பு

இலங்கையில் அனர்த்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு புதிய சலுகை கடன் திட்டமொன்று செயல்படுத்தப்படவுள்ளது.

நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீள எழுச்சிபெற செய்வதற்காக இந்த கடன் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இந்த கடன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் அதன் வட்டி விகிதம் 3 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும் இந்த கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுண் நிறுவனங்களுக்கு இதன்கீழ் அதிகபட்சமாக 250,000 ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ஒரு மில்லியன் ரூபாயாகும் என்பதுடன் இதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.