காணாமல் போனோர் குழுவின் ஆய்வுக்கூட்டத்தில் நீதி அமைச்சர் பங்கேற்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை (செப்டம்பர் 24) புறப்படவுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் இலங்கையின் முதலாவது ஆய்வுக்கூட்டம் இதுவாகும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சர் நாணயக்கார விளக்கமளிக்க உள்ளார்.

இந்தக் கூட்டம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை சர்வதேச அரங்கில் விவாதிப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.