இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தற்போது உள்நாட்டு இடங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கப்பல் கோர்டேலியா ஜூன் 5-ம் திகதி சென்னையில் இருந்து புறப்படவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூன் 7 ஆம் திகதி, இந்த கப்பல் பயண அறிமுகத்தை குறிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.