யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தி தேர்தலை சாத்தியப்படுத்தியதாக இந்திய படை தெரிவிப்பு

01. 1987 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் மேற்கொண்டு நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில், அந்த நாட்டின் உளவுத்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியப் படைத்தளபதி ஒருவர் மறுத்துள்ளார்.

அது ஒரு இராணுவ தோல்வி அல்ல என்றும் மாறாக ஒரு அரசியல் தோல்வி என்றும் மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.  இந்தியப் படைகள், யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தியது மற்றும் தமிழ் தேர்தல்களைச் சாத்தியமாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தியாவின் தடுமாற்றமான தலைமை அதன் வெற்றிகளை வீணடித்தது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தோல்விக்கு இராணுவம் மற்றும் உளவுத்துறையைக் குற்றம் சாட்டி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தொடர்பிலேயே ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.