இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் – காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகளுடன் ஒன்பது இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 02ஆம் திகதி இரவு, நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.