இந்தியா தனது அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரியாக உள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை – இந்தியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கௌரவமளிக்கும் வகையில் ஒரு வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்க குழுவினர், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இந்தியாவிற்கு வெற்றிகரமாக மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னணியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
உயர்ஸ்தானிகர் தனது உரையில், இந்தியாவையும் இலங்கையையும் பிணைத்துள்ள ஆழமான, நாகரீகமான மற்றும் மக்கள் சார்ந்த உறவுகளை வலியுறுத்தினார். கடந்த ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இருதரப்பு உறவுகளில் இது ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ளார்.
வலுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு, சுகாதாரம், ரயில்வே மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பிரத்தியேக வளர்ச்சி உதவி உள்ளிட்ட இந்த சுற்றுப்பயணத்தின் குறிப்பிடத்தக்க பயன்களாகும் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
பெரிய நாடுகளுக்கும் சிறிய நாடுகளுக்கும் இடையிலான சமமற்ற கூட்டாண்மைகளுக்கு மத்தியில், இந்தியா தனது அயல் நாடுகளுடன் உறவுகளைக் கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரியாக உள்ளது என்பதை உயர் ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.
இந்தியா -இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது பரந்த சந்தைகளை, இலங்கையிடம் இருந்து பெறுவதை விடவும் அதிகமான அணுகலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஒரு வளரும் நாடாக இருந்தபோதிலும், 2022-இல் சவாலான காலகட்டங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கணிசமான மற்றும் நிபந்தனையற்ற உதவிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் வலுவான பொருளாதார மறுமலர்ச்சியை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், தற்போது இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகவும் உள்ளது என்றார்.
அமைதியைப் பேணுவதிலும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஒரு விதிகள் அடிப்படையிலான பிராந்திய ஒழுங்கை மேம்படுத்துவதிலும் இந்தியாவும் இலங்கையும் இயற்கையான பங்காளிகள் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற நட்புறவு சங்கம் தொடர்ந்து ஒரு ஆற்றல்மிக்க தளமாக இருந்து, உரையாடலை வளர்த்து, பரஸ்பர நலன்களை மேம்படுத்தி, ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராயும் என்று உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்தார்.
23 உறுப்பினர்கள் கொண்ட நட்புறவு சங்க குழுவினரை வழி நடத்திய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, டில்லியில் அக்குழுவினர் மேற்கொண்ட பல்வேறு சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டார்.
பொது சுகாதாரம், மலிவான மருந்துகள், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய நுண்ணறிவுமிக்க விவாதங்களும் அதில் அடங்கும். முன்னணி சுகாதார நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப்களுக்கும் குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.
இந்தியாவின் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமியற்றும் நடைமுறைகளைப் பற்றிய அனுபவம் மதிப்புமிக்க கற்றலை வழங்கியதாகவும், மேலும் இந்த விஜயம் இந்தியாவில் தற்போது நடந்து வரும் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றத்தை நேரடியாக அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை-இந்தியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு, பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு பொதுவான பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ள