இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI உச்சி மாநாடு 2026’ இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்:
- பூட்டான் – பிரதமர் ஷெரிங் டோப்கே
- பொலிவியா – துணைத் தலைவர் எட்மண்ட் லாரா மொன்டானோ
- பிரேசில் – ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
- குரோஷியா – பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்
- எஸ்டோனியா – ஜனாதிபதி அலார் கரிஸ்
- பின்லாந்து – பிரதமர் பெட்டேரி ஓர்போ
- பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்
- கிரீஸ் – பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
- கயானா – துணைத் தலைவர் டாக்டர் பாரத் ஜக்டியோ
- கஜகஸ்தான் – பிரதமர் ஓல்ஜாஸ் பெக்டெனோவ்
- லிச்சென்ஸ்டைன் – அதிபர் இளவரசர் அலோயிஸ், லிச்சென்ஸ்டைன்
- மொரிஷியஸ் – பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம்
- செர்பியா – ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்
- ஸ்லோவாக்கியா – ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி
- ஸ்பெயின் – ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்டெஜோன்
- இலங்கை – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
- சீஷெல்ஸ் – துணைத் தலைவர் செபாஸ்டியன் பிள்ளே
- சுவிட்சர்லாந்து – ஜனாதிபதி கை பார்மெலின்
- நெதர்லாந்து – பிரதமர் டிக் ஸ்கூஃப்
- ஐக்கிய அரபு அமீரகம் – அபுதாபியின் கிரீட இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல்
இது தவிர, 45க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் இந்த இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.



