இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது  நாளை 15ஆம் திகதி  முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்காவானது  இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது, மேலும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் குறித்து பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும்  அமெரிக்கா ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.