இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஒன்றுகூடி கலந்துரையாடுகின்றன.
குறித்த கூட்டமானது இன்று (13) மாலை இணைய வழியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை (14) நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சி இன்று எடுக்கும் முடிவை நாளை பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



