ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தை நாளைய தினம் (10) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (10) முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை இந்த விவாதத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் ஏற்பாடாக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.