ஒற்றையாட்சிக்குள் தீர்வைப்பெற தமிழரசு கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே இது மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க விடம் தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே இது மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் இந்த மண்ணில் முற்று முழுதாக தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் கனடா வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
19ம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது இதில் தமிழர்களுடைய 70 வருட கால சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.
அது மிகப் பெரும் அநியாயம் அது மாவீர்களுக்கு செய்யப்படும் ஒரு அநீதி இந்த ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட்டு தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட்டால் நீங்கள் மாவீர்களுடைய அம்மாக்கள் அப்பாக்கள் ஆனால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டு தமிழர்கள் ஏற்றக் கொள்ளப்படுவார்களாக இருந்தால் ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் என்பதுடன் இந்த மண்ணில் முற்று முழுதாக தமிழர்கள் அழிக்கப்படுவார்கள்.
மேலும் அனுர சட்டத்திற்கு அனைவரும் சமம் என தெரிவித்து திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவி இருக்கிறார் எனவே அலர் பௌத்தத்திற்கு அடிமை என்பதை நிரூபித்துள்ளார் என்றார்.




