இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர்கள் நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஆண், பெண் பிள்ளைகள் என நான்கு பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது போர் முடிவுற்று இயல்பு வாழ்வு திரும்புவதான செய்தியில் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (14) இரவு தமிழ்நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களை கடற்படையினர் அல்லது பொலிஸார் கண்டுகொள்ளாதபோதும் தாமாக அவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விபரம் தெரிவித்துள்ள நிலையில், பின்னர் நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.