அமெரிக்க – ரஸ்ய பேச்சுக்குறித்து ஐரோப்பா கவலை

அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்ப் அலாஸ்காவில் ஒரு “மோசமான ஒப்பந்தம்” செய்து, ராஜதந்திர வெற்றியை அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் கவலைப்படுகிறார்கள் என தி எகனாமிஸ்ட் என்ற ஊடகம் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளது.
உக்ரைனையும் அதன் நட்பு நாடுகளையும் ஒரு மீளமுடியாத நிலைக்கு இந்த உடன்பாடு கொண்டுசெல்லக்கூடும். ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான ட்ரம்பின் இந்த வாரம் இடம்பெற்ற காணொளி உச்சிமாநாட்டிற்குப் பிறகும், ஜெலென்ஸ்கியால் செயல்படுத்த கடினமாக இருக்கும் ஒரு பிராந்திய பரிமாற்றத்தை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்துகிறார் என்று உக்ரைனின் நட்பு நாடுகள் கவலைப்படுகின்றன.
ட்ரம்பின் சமீபத்திய அணுகுமுறை மாற்றத்தில், அவரது ரியல் எஸ்டேட் வணிக கூட்டாளியான விட்காஃப் முக்கிய பங்கு வகித்துள்ளார். விட்காஃப் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பெரிய ஒப் பந்தத்தை ஆதரிக்கிறார். பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடுவது பொதுவாக உக்ரைனுக்கு தீங்கு விளைவிக்கும். எப்படியோ, ரஷ்யா தனது வசம் வைத்திருக்கும் பிரதேசங்களின் மீதான கட்டுப்பாட்டை அங்கீகரிப்பது குறித்த விவாதம், ரஷ்யாவிடம் இன்னும் அதிகமான பிரதேசங்களை ஒப்படைப்பது பற்றிய பேச்சு வார்த்தைகளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனிய துருப்புகள் இருந்தது முதல், நிலப்பரிமாற்றக் கருத்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, உக்ரைன் குர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதால், இந்த திட்டம் சர்ச்சைக் குரியதாக மாறியுள்ளது.
இருப்பினும், பரிமாற்றக் கருத்து வாஷிங்டனில் தொடர்ந்து வாழ்வதாகத் தெரி கிறது. சமீபத்திய உக்ரேனிய திட்டங்களில் ஒரு தெளிவான நிபந்தனை இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. பிராந்திய சலுகைகள் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக முழுமையான போர்நிறுத்தம் இருக்க வேண்டும் என்பதே அது. ஆனால், உக்ரைனை அதன் சொந்த பிரதேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு எதிர்த்திட்டத்தை முன்வைக்க அழைப்பு விடுக் கும் அமெரிக்கர்களுக்கு இது போதாது,” என்று தி எகனாமிஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.