போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்: ஜகத் வீரசிங்க தெரிவிப்பு

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சிறையில் 805 ஆண்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். 21 பெண்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். 805 பேரில் 5 பள்ளி மாணவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். தெற்கு பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. இவ்வளவு படித்த ஒரு சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாற்றப்பட்டது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அந்த மக்கள் எப்படி பெரிய அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள்.

அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழித்து வருகிறார்கள். எனவே, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்ந்து தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல.” எனவும் அவர் கூறினார்