கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி கருணாவோடு இங்குள்ளவர்களை கைகோர்க்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக போட்டியிடும் அவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திலேயே 6ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன் .அரசியலுக்கு வரவேண்டும் என்கின்ற எண்ணம் நோக்கம் இருந்ததில்லை மக்களுடைய வேண்டுகோளிற்கும் கட்சியினுடைய அழைப்பின் பேரிலும் இந்த தேர்தலில் நான் களமிறங்கியிருக்கின்றேன்.
கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் தமிழர் நலன் சார்ந்த பல விடையங்களில் மனித உரிமை செயற்பாட்டாளராக மனித உரிமைகள் செயற்பாட்டாளராக பல்வேறு பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றேன்.எதிர்கா
எங்களுடைய கலை,கலாச்சாரம் ,எல்லைகள் காப்பாற்றப்படவேண்டும்.நிலம் பாதுகாக்கட வேண்டும் என்ற விடையத்தில் அதிகமாக பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை தொடக்கம் அதிகமாக கல்வி விடையங்களில் என்னை ஈடுபடுத்தி செயற்பட்டிருக்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை ஏன் எனில் அம்பாறை மாவட்ட மக்கள் தமிழோடும் தேசியத்தோடும் பின்னி பிணைந்தவர்கள்.
இருந்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி கருணாவோடு இங்குள்ளவர்களை கைகோர்க்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மை . இந்த விடையங்களை மக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் தமிழ் தேசியத்தின் பால் மக்களை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடயத்தில் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் ஒன்றிணைந்து பயணிக்க தயாராக இருக்கின்றோம்.
கடந்த நல்லாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுகொடுத்து கொண்டு இருந்தது என்ற சர்ச்சைகள் இருந்தாலும் இராஜ தந்திர ரீதியான சில நகர்வுகள் நகர்த்த வேண்டிய தேவைப்பாடு இருந்ததன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது அவர் தெரிவித்தார்.