முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தம்மை கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவர் முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபர் என பெயரிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.