அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தியதாக கூறுப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக பெயரிட முடியாது என்று அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய கூறியுள்ளார்.
சந்தேநபரின் பெயர் அர்ச்சுனா லோச்சன என்று பொலிஸார் சமர்ப்பித்த பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் தேசிய அடையாள அட்டையுடன் நீதிமன்றில் முன்னிலையான சந்தேகநபரின் பெயர் இராமநாதன் அர்ச்சுனா என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
‘இரண்டு பெயர்களிலும் வித்தியாசம் காணப்படுகிறது. ‘ ‘எனவே இராமநான் அர்ச்சுனாவை சந்தேகநபராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று நீதவான் அறிவித்துள்ளார்.



