மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) இயற்கை எய்தினார். அவர்களின் இறுதிச்சடங்கு கரவெட்டியில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் போராளிகள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கந்தையா ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதோடு இரங்கல் உரையும் ஆற்றினார். ‘இலக்கு’ ஊடகமும் தனது அஞ்சலிகளை செலுத்திக்கொள்கின்றது.