செம்மணியில் பின்னிப்பிணைந்த நிலையில் என்புக்கூடுகள் அடையாளம்!

சர்வதேச சமூகத்தை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நாளுக்கு நாள் மனித புதைகுழி விவகாரங்களும் தீவிரமடைகின்றன.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் என்புகள் வெளிப்பட்ட வண்ணமே உள்ளன.

இதன்படி, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 43ஆவது நாள் அகழ்வு பணி இன்று (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, 04 என்புக்கூடுகள் வெளிப்பட்டன. இன்றைய தினம் சுமார் 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், இதுவரை மொத்தமாக 235 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில், 224 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.