இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்- ஜெனீவா அமர்வில் கவலை

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வேண்டுகோள் கரிசனை வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50ஆவது அமர்வில் கனடா பிரிட்டன் அமெரிக்கா ஜேர்மன் மலாவி மொன்டினீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கரிசனையை வெளியிட்டுள்ளன.

 

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றுக்கான தங்களது உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சமீபகாலங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்தும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

இந்த வன்முறைகளிற்கு காரணமானவர்கள் பொறுப்புக் கூறச் செய்யப்பட வேண்டும் என மேலும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Tamil News