ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதிலிருந்து, தற்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள்ள அநுர குமார திசாநாயக்க ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார்.

அதனைத் தொடர்ந்து  2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டஙகளிலும் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்து வந்தார். இதனால் இலங்கையில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது எனலாம். இது அவரை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையச் செய்த்துள்ளது.

இந்த நிலையில், அநுர குமார திசாநாயக்க  ஜனாதிபதியானதும், இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத்தொடர்ந்து , கடந்த ஆட்சிக் கால கட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.