இலங்கையின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவு: ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் கருத்து

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (03) திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கைக்கு மனிதாபிமான உதவியின் கீழ் ரஷ்ய கூட்டமைப்பிடம் இருந்து பெறப்பட்ட உரத்துக்கு தாம் மிகவும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துடனும் இலங்கையுடனும் மிக நெருக்கமாக செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக ரஷ்யத் தூதுவர் Levan S. Dzhagaryan அவ்வேளையில் தெரிவித்தார்.