ரணில் விக்ரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகள், முன்னாள் ஜனாதிபதிகள் மீதும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஞானமுத்து ஸ்ரீ நேசன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அவர்களும் கைது செய்யப்படாவிட்டால், ரணில் கைது செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்கலாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, போரத்தீவுபற்று பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஞானமுத்து ஸ்ரீ நேசன் இந்த கருத்தை வெளியிட்டார்.