தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நவநாதன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இனப்படுகொலை என்பதனை தமிழக மற்றும் இந்திய மத்திய அரசுகள் ஆதாரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்துக் அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மக்களின் மௌனம் கலையவேண்டும் என்றும் அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
இதனிடையே, நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் மதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் வலியுறுத்தியுள்ளார்.
நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல என்றும் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட என்றும் கௌதமன் குறிப்பிட்டார்.



