நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது.

இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது.