திருகோணமலையில் கடற்படையினரால் 20 பேர் கைது

திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் பல நாள் மீன்பிடி படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, பெளல் முனைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்களும், இதில் 6 பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் மற்றும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.