அரச தலைவர் – மாகாணசபை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் – பவ்ரல் அமைப்பு

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக் குழு (பவ்ரல்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருக்கு இந்த அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இதற்கான சட்டமூலம் திருத்தப்பட வேண்டும். எல்லைகள் தொடர்பான அறிக்கை இல்லாத காரணத்தினால் மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் 2 பில்லியன் ரூபாய்களை சேமிக்கலாம்.

இரண்டு தேர்தல்களையும் 6 மாத இடைவெளியில் நடத்தினால் அரசியல் வாதிகள் மக்களுக்கான பணிகளை விடுத்து தேர்தல் பணிகளிலேயே அதிக அக்கறை காண்பிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.