9 வருடங்களாக அவுஸ்திரேலிய சிறையில் வாடும் அகதி

பார்வையற்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டதற்காக ஐ.நா. கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, அவரை உடனடியாக விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேற்படி அகதி கண்பார்வையற்றவர் என்பதுடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரை 9 வருடங்கள் தடுத்து வைத்திருப்பதனால் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. குறிப்பிட்ட அகதியை விடுதலை செய்வதுடன் அவருக்குரிய நஸ்ட ஈட்டையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா கோரியுள்ளது.

2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அதன் போது அவருக்கு 27 வயது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தத்தின் போது சித்திரவதைகள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு ஆளானதால் குமார் அவுஸ்திரேலியா சென்றார்.

கண்பார்வையற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கடந்த 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாகும். இதனால் அவரை விடுதலை செய்வதே முறையான செயலாகும் என ஐ.நா. அறிக்கை விடுத்துள்ளது.