கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம்

கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது.

கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.