கொரோனாவால் 618 ஆவது மரணம் பதிவு – நேற்றைய தினம் ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்தது.

பிட்டபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 52 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.